/* */

ஈரோட்டில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

ஈரோடு திண்டல் பகுதியில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

ஈரோட்டில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
X

பிரகாஷ்.

ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). லேத் பட்டறை தொழிலாளி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு 17 வயது பள்ளி மாணவியிடம் பழகி வந்தார். இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த 31-ம் தேதி கடத்திச் சென்றார். பின்னர் அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் ஈரோட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியையும் போலீசார் மீட்டனர். மாணவியை கடத்தி திருமணம் செய்ததற்காக பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 24 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!