காந்தி ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2ல் விடுமுறை..!

காந்தி ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2ல் விடுமுறை..!

டாஸ்மாக் கடைகள் விடுமுறை (பைல் படம்).

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மறுநாள் அக்.2ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மறுநாள் அக்.2ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி (முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை அன்றைய தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 மதுபான உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story