/* */

பவானி அருகே தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டம்

பவானி அருகே நடைபெற்ற தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பேரவை கூட்டம்
X
பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகரில் பவிஷ்பார்கில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட பேரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தா வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு பவானி அம்மாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் அரசிடம் வைத்து சலுகைகள் பட்டியலிடப்பட்டது.

தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணை மையத்திற்கு இலவச குடியிருப்பு மின்சாரம் வழங்க வேண்டும். மகப்பேறு சிசு இறப்பு முழு பொறுப்பு செவிலியர்க்கு என்பதை கைவிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பதிவு ஏடுகள் பராமரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 3 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்