சித்தோடு அருகே குடும்ப தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே குடும்ப தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை
X
சித்தோடு அருகே குடும்ப தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). டையிங் மெஷின் மெக்கானி. இவருக்கு மாலதி என்ற மனைவியும், தவஸ்வினி மற்றும் தீபினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், செந்தில்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், குடித்துவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்படவே, மாலதி மற்றும் மகள்கள் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்குமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பதவி நீக்கம் – நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு கே.எஸ். மூர்த்தி புதிய பொறுப்பாளராக நியமனம் !