/* */

ஈரோடு மாவட்டம்: நாளை பிளஸ்-2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது

ஈரோடு மாவட்டத்தில் 104 மையங்களில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம்: நாளை பிளஸ்-2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது
X

மாதிரிப்படம்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்தாண்டு பிளஸ்-2 தேர்வுகள் திட்டமிட்டப்பட்டி நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அதன்படி, நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 909 பேர் எழுதுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 104 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.மேலும் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தனித்தேர்வர்களுக்காக 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

Updated On: 4 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்