அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு..!

அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு..!

மாணவன் தினேஷ்குமார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பருவாச்சி கிராமம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 13), சேத்துனாம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சிறுவன் தினேஷ்குமார் கடந்த மாதம் 16ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளான்.

தொடர்ந்து, சிறுவனது பெற்றோர் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்று பின்னர் வீடு திரும்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுவனுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே பூனாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஈரோடு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் எனக்கூறி கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கோவைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கடந்த 20ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் கடந்த 28ம் தேதி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 30ம் தேதி உயிரிழந்தான். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி (வயது 34) என்ற பெண்ணுக்கு எலிக்காய்ச்சல் அறிகுறி இருந்ததால் நேற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
Similar Posts
புதிய தொழில்நுட்பத்தில் கமலின் மருதநாயகம்! மணியும் கமலும் போடும் திட்டம்..!
மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்..!
சத்தியமங்கலம் அருகே தார் சாலையை சீரமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்
பூஜா, ப்ரியாமணி, மமிதா இன்னும் எத்தன பேரு நடிக்கிறாங்க?
அந்தியூர் பருவாச்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு..!
உடுமலையில்  80 ஆண்டு பாரம்பரிய நிலம் மோசடி..? முதியவர் குடும்பம் நீதி கோரி மனு..!
விமானப்படை தினத்தையொட்டி மெரினாவில் ட்ரோன் பறக்க தடை ..!
தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா? அரசியல் பின்னணியோ?
உதயநிதி துணை முதல்வர்-சரியா? தவறா?  வேறு வழியில்லை என்பதே உண்மை..!
தன்னை சந்திக்க வரவேண்டாம்... உதயநிதி வேண்டுகோள்.!
பூமிக்கு அருகில் வந்துள்ள மினி நிலா: 2 மாதம் தெரியும்..!
தூய்மை இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு: கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி