அந்தியூரில் கல்லூரி: எம்எல்ஏ வெங்கடாசலத்திற்கு திமுகவினர் வரவேற்பு

அந்தியூரில் கல்லூரி: எம்எல்ஏ வெங்கடாசலத்திற்கு திமுகவினர் வரவேற்பு
X

 அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு, திமுக இளைஞரணி சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் அந்தியூர் எம்எல்ஏவுக்கு, திமுக இளைஞரணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என, சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.நீண்ட நாள் கோரிக்கையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அறிவிப்பு வெளியானதால், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் அந்தியூர் எம் எல் ஏ ஏ ஜி வெங்கடாசலத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அதன்பிறகு அந்தியூர் வருகை தந்த திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலத்திற்கு, அந்தியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீ. வைத்தீஸ்வரன் ஏற்பாட்டில், தவிட்டுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்திய எம்எல்ஏவுக்கு, சால்வை மழை பொழிந்தனர். இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், பேரூர் கழக துணைச் செயலாளர் ஏ சி பழனிச்சாமி, கெட்டிசமுத்திரம் முன்னாள் ஊராட்சி செயலர் நாகராஜ், திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?