/* */

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தி கவுந்தப்பாடி, கோபி, பவானி, பெருந்துறை பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
X

கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு, கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, கோபி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பாக, நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தும், ஏழை எளிய மாணவ மாணவிகளின் மருத்துவ கனவை நனவாக்கும் நீட் தேர்வை வரவேற்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தினை, இன்று கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் மாவட்ட செயலாளர் இந்து சபரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன், கவுந்தப்பாடி நகரச் செயலாளர் தயானந்தன், பவானி ஒன்றிய செயலாளர் யுவராஜ் கவுந்தப்பாடி நகர் இளைஞரணி செயலாளர் ஹரி , பாரதிய ஜனதா கட்சிப் பொறுப்பாளர் முரளி, கொங்குநாடு மக்கள் பேரவை பொறுப்பாளர் கவுந்தி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கோபியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் செல்வகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் நகர தலைவர் மணிகண்டன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பவானியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் ஆட்டோ ரவி, பவானி நகரச் செயலாளர் விஜய், கோவிந்தன், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆனந்து ரங்கராஜ் துவக்கி வைத்தார். பெருந்துறை நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நீட் தேர்வினை வரவேற்று ஆர்வத்தோடு கையெழுத்திட்டு சென்றனர்.

Updated On: 9 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்