/* */

அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்

அந்தியூர் தேர்வீதியில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றில் சேதமானதால், புதிதாக சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

அந்தியூரில் தேரை சுற்றி அமைக்கப்பட்ட கொட்டகை சூறைக் காற்றால் சேதம்
X

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், அந்தியூர் தேர்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை, வெயிலால் பாதிக்காமல் இருக்க, தேரை சுற்றிலும் தகரத்தாலான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளி காற்றால் தேரை சுற்றி அமைக்கப்பட்ட தகர கொட்டகை சாய்ந்து சேதமடைந்தன.மேலும் கொட்டகைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள சுமார் 4 அடி உயரம் கொண்ட கான்கிரீட் திட்டுக்களும் சேதமடைந்தன.

இதையடுத்து, சாய்ந்த கொட்டகையை அகற்றி, தேரைச் சுற்றி சுவர் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 2 தினங்களாக தகரத்தை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...