/* */

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்
X

ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7-ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுக ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது இரட்டை இலை சின்னத்தை கோரி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் செந்தில் முருகன் விருப்ப மனுவும் அளித்தார். முன்னதாக, ஈரோட்டில் ஓபிஎஸ் அணியின் அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வேட்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசியதாவது, பாஜக, வேட்பாளரை அறிவித்தாலும், நாங்கள் வாபஸ் பெற மாட்டோம். எங்களது வேட்பாளரை வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செந்தில் முருகன் தான். ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்தாலும், எங்கள் வேட்பாளர் செந்தில்நாதன் தான். எங்கள் வேட்பாளரை எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Updated On: 3 Feb 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு