பவானி-அந்தியூர் பிரிவில் உணவகத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
X
கைது செய்யப்பட்ட மாணிக்கம்
By - S.Gokulkrishnan, Reporter |12 April 2022 12:30 PM IST
ஈரோடு மாவட்டம் பவானி-அந்தியூர் பிரிவில் உணவகத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி- அந்தியூர் பிரிவில் உள்ள பாஸ்ட்புட் உணவகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள உணவகத்தினை சோதனை செய்தனர்.
சோதனையில், தமிழக அரசின் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பவானி சிவஞானம்சந்து பகுதியை சேர்ந்த மாணிக்கம் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu