ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் நடக்கிறது.

போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 69 வாகனங்கள், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளன. இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி, ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27ம் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம். பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி