/* */

ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29ம் தேதி ஏலம் நடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 29ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்

போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 69 வாகனங்கள், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளன. இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் விடப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி, ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27ம் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம். பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?