/* */

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு

பவானிசாகர் அருகே வேலி கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனத்தில் விட்டனர்.

HIGHLIGHTS

பவானிசாகர் அருகே புதரில் சிக்கித் தவித்த கரடி மீட்பு
X
வேலியில் சிக்கிய கரடி.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில் பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே சுற்றித் திரிந்துள்ளது. அப்போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த கம்பியில் சிக்கிக்கொண்டது. இதனால் அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. ஆடு, மேடு மேய்த்தவர்கள் அதைப் பார்த்து உடனே பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.


இதையடுத்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் தலைமையில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் புதரில் சிக்கித் தவித்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார்.இதைத்தொடர்ந்து வனத் துறை ஊழியர்கள் புதரில் சிக்கிய கரடியை மீட்டு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 30 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!