/* */

கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க நடவடிக்கை

திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கனமழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் சீரமைக்க நடவடிக்கை
X

புதிய தார்ச்சாலை அமைக்கும் பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துச்சாமி.

ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சென்னையில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு பல்வேறு இடங்களிலும் தேங்கியிருக்கும் நிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் போர்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றார். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் முத்துசாமி, 2 ஆண்டுகளில் இதற்கான தீர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அவர், அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், அரசுடன் இணைந்து செயல்பட்டால் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றார்.

Updated On: 15 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்