/* */

காவிரியில் தண்ணீர் விட மறுப்பு: இந்தியா கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்?

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்? என்று த.மா.கா. இளைஞரணி வேள்வி எழுப்பி உள்ளது.

HIGHLIGHTS

காவிரியில் தண்ணீர் விட மறுப்பு: இந்தியா கூட்டணி குரல் கொடுக்காதது ஏன்?
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா.

கர்நாடகாவின் சர்வாதிகார போக்குக்கு எதிராக இண்டியா கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 12ம் தேதி (நேற்று) நடைபெற்றது. இக்குழுவின் தலைவர் வினித்குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மைக் கூட்டத்தில், வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதை நிறைவேற்றித் தரக்கோரி நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழகம் முறையிட்டது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை. தமிழகத்தின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று மறுத்துள்ளார். இப்பொழுது தமிழக விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் செய்யப் போவது என்ன?.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை. கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு வந்த தண்ணீர் கூட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வந்தது தவிர கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல.

ஏற்கனவே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வருகின்றார்கள். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை. ஆனால், இந்த சூழலை தமிழ்நாடு எவ்வாறு சமாளிக்கப்போகிறது? கர்நாடகத்திடமிருந்து எவ்வாறு தண்ணீர் பெறப் போகிறது?.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக முதல்வரும், ஆளும் தி.மு.க. கட்சியும் தமிழக மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பக்கத்து மாநிலத்திற்கு தர வேண்டிய முறையான உரிமையை கூட தர மறுக்கும் சூழலில் இந்தியா கூட்டணி இந்தியாவை ஒருங்கிணைக்கப் போகின்றதா? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் தர வேண்டும். மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசை தேவையில்லாத காரணங்களுக்கு இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கர்நாடகாவின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக இந்தியா கூட்டணியில் குரல் கொடுக்காதது ஏன்?.

தேர்தல் வரும்போது எல்லாம் பொய்யான வாக்குறுதியை கூறும் ஸ்டாலின் நீட் விவகாரம் தலையெடுத்த போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்கிறார். அடுத்து இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆவண செய்வேன் என்று சொல்வார்களோ! என்னவோ? அதுவரை தமிழக மக்களின் கதி?. ஒன்று தமிழகத்திற்கு தரவேண்டிய உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்டதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கர்நாடக சர்வாதிகாரப் பேச்சுக்கு எதிராக இந்தியா கூட்டணியை விட்டு ஸ்டாலின் அவர்கள் விலக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 13 Sep 2023 1:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...