ஈரோடு மாவட்டத்தில் மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு விருது

ஈரோடு மாவட்டத்தில் மூன்று தலைமை ஆசிரியர்களுக்கு விருது
X

விருது (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறுபவர்களை பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறுவர்களை பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை மாநில தேர்வு குழுவால், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு, 2022- 23ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விழா திருச்சியில் நாளை நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய், பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்று, கேடயம் வழங்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறுவர்களை பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு எஸ்கேசி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுமதி விருது பெறுகிறார்.

இதுபோல், பெருந்துறை ஒன்றியம் என்.கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா என மூன்று தலைமை ஆசிரியர்கள் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் விருதுக்கு தேர்வு பெற்று உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business