/* */

ஏளூர் பகுதியில் கரும்பு லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஏளூர் பகுதியில் வயர்களில் உரசி மின்சாரம் துண்டிப்புக்கு காரணமான கரும்பு லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஏளூர் பகுதியில் கரும்பு லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
X

பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட லாரி.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூரில், சென்றபோது சத்தி-அத்தாணி நெடுஞ்சாலையின் குறுக்கே தொங்கிய மின்சார வயரில் கரும்பு ஏற்றி வந்த லாரி உரசியதால் தீப்பொறி பறந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது.

இதனையடுத்து வீடுகளுக்கும் மின்வினியோகம் தடைப்பட்டது. இதையறிந்து அங்குதிரண்ட அப்பகுதி பொதுமக்கள் 2 கரும்பு லாரிகளை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரமாக அடுக்கப்பட்ட கரும்பு லாரிகள் வரும்போது அதில் உரசி தீப்பொறி பறக்கிறது என்றனர்.

இதையடுத்து போலீசார் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் லாரியில் உரசிய மின்சார ஒயர்களை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

Updated On: 5 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி