/* */

கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தொழிலாளியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறி, கவுந்தப்பாடிபுதூர் அரசு பள்ளி முன்பு, பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவர், நேற்று காலை வேலைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தனது அக்கா மாரியம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இதனால் மாரியம்மாள், தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு ஆவேசமடைந்த உறவினர்கள், கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், கவுந்தப்பாடிபுதூர் அரசு பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். முருகேசனை போலீசார் அழைத்துச் செல்லவில்லை என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 27 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.