அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: கையும் களவுமாக பிடித்தனர்
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |10 March 2022 6:30 PM IST
அந்தியூர் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நகலூர் மயானம் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, நகலூரை சேர்ந்த சிரில் ஜோசப் என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து ஆறு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu