பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்!

பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்!
X
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவு அருகே இன்று (மே.8) அதிகாலை 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது .

இந்த நிலையில், பேருந்தின் குறுக்கே 4 சக்கர வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவல் இருந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Similar Posts
காலாவதியான விசா – குடியுரிமை கோரி இலங்கை தமிழர்கள் கலெக்டரிடம் மனு
ஓமலூரில் கழிவுநீர் கலந்த குடிநீர், மக்கள் சுகாதார அவலம்
குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி பட்டமளிப்பு விழா
விளையாட்டு போட்டியில் மாநில அளவுக்குச் செல்லும் வாய்ப்பு
நாய்கள் தாக்கியதால் ஆடுகள் பலி
பெரியார் பல்கலை ஊழல், ஊழியர்கள் போராட்டம்
செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ‘சாஹா–2025’ தேசிய தொழில்நுட்ப கருத்தரங்க விழா
600க்கு  599 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த மளிகை கடை உரிமையாளரின் மகன்
ஆலங்கட்டி மழையால் மக்கள் ஆச்சரியம், விவசாயிகள் மகிழ்ச்சி
பிளஸ்–2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தின் அசத்தல் சாதனை
இடைப்பாடியில் மக்கள் சந்திப்பு முகாம்
வாழப்பாடியில் தார்ச்சாலை பணியின் தர ஆய்வு
மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா