சிவகிரி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சிவகிரி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட சிவகிரி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட சிவகிரி துணை மின் நிலையத்தில் நாளை (10ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம் வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குல விலக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயபரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில் தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுபுதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சி பாளையம், முத்தையன் வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்குப்புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
future of ai in retail