பவானி ஊராட்சிக்கோட்டையில் நாளை மின்தடை

பவானி ஊராட்சிக்கோட்டையில் நாளை மின்தடை
X

பைல் படம்

பவானி அருகே, ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், நாளை (5ம் தேதி) நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் பவானிநகர் முழுவதும் மூன்றுரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிப்பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டடிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டக்காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture