/* */

மின் இணைப்பு: விவசாயிகளுக்கு வரும் 23-ம் தேதி சிறப்பு முகாம்

விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அதற்கான அறிவிப்பு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் அணுகி பயன் பெறலாம்.

HIGHLIGHTS

மின் இணைப்பு: விவசாயிகளுக்கு வரும் 23-ம் தேதி சிறப்பு முகாம்
X

கோப்பு படம் 

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த, ஈரோடு மின் பகிர்மான வட்டம், நகரிய கோட்டத் துக்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு, பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடத்துகிறது.

அதன்படி, கவுந்தப்பாடி பிரிவு அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல், மாலை 3 மணி வரை முகாம் நடக்கிறது. விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அதற்கான அறிவிப்பு பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் நேரில் அணுகி பயன் பெறலாம். சர்வே எண், உட்பிரிவு மற்றத்துக்கு வி.ஏ.ஒ., சான்று, வரைபடம் வழங்கினால், அன்றே மாற்றம் செய்யலாம். சர்வே எண், கிணறு மாற்றம் பழைய, புதிய கிணற்றுக்கான வி.ஏ.ஒ. சான்று, வரைபடம் வழங்கினால் 7 நாட்களில் மாற்றம் செய்யப்படும். எவ்வித மாற்றமும் தேவைப்படாத, முழுமையான ஆவணங்களும் பெற்று கொள்ளப்படும் என செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...