/* */

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் 7.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்‌.

HIGHLIGHTS

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்
X

பைல் படம்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப்பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் ஆயிரத்து 382 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புபினை வரும் ஜன.4ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தொடர்புடைய நியாய விலை கடைகளுக்கு சென்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?