/* */

கீழ்வாணி அருகே சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கீழ்வாணி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

HIGHLIGHTS

கீழ்வாணி அருகே சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விமல் ராஜ்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் விமல்ராஜ் (வயது 17). இவர், கோபியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், விமல்ராஜ் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, கீழ்வாணி ஆஞ்சநேயர் கோவில் பிரிவிக்கும் செங்காட்டு புதூர் பிரிவிற்கு இடையே உள்ள வளைவில் வந்தபோது, எதிரே மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விமல்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, விமல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக விமல்ராஜின் உடலானது அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’