/* */

அம்மாபேட்டை பேரூராட்சி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கூறி முற்றுகை

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக கூறி அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பேரூராட்சி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு என கூறி முற்றுகை
X

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியினை வாக்காளர் அனுமதியின்றி, மாற்றம் செய்திருப்பதாக, கூறி திமுக அதிமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 50 வருடங்களாக ஒரே முகவரியில் 150-க்கும் மேற்பட்டோரின் வார்டு முகவரியை மாற்றம் செய்திருப்பதாக, கூறி முறையிட்டனர். இதனையடுத்து, மாற்றம் செய்யப்பட்ட வார்டுகளில் உள்ள வாக்காளர் முகவரியினை திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பது வாக்காளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க