நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
X
கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி அருகே நம்பியூர் சேர்ந்தவர் அனிதா (வயது 40). இவர் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த மகன் மாரிமுத்து (22). திருப்பூர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.அனிதா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, அதிக மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, அருகில் இருந்தவர்கள் அனிதாவை காப்பாற்றினார்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture