Begin typing your search above and press return to search.
அந்தியூர் அருகே ஏரியில் ஆண் சடலம்
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நடத்திய விசாரணையில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சன்னன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.