ஈரோடு மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 23 பேர் கைது: போலீஸார் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் 23 பேர் கைது: போலீஸார் நடவடிக்கை
கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது

ஈரோடு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் நடப்பாண்டில், இதுவரை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 23 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஐந்து பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

Tags

Next Story