/* */

பவானியில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம்

ஈரோடு மாவட்டம் பவானியில் அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

பவானியில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம்
X

பவானி சாலைகளில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார்.

ஈரோடு மாவட்டம், பவானியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தது. பொது போக்குவரத்திற்கு அனுமதி இல்லாததால் சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவ ஆம்புலன்ஸ்கள், போலீசாரின் வாகனங்கள் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.

எனினும் திருமண நிகழ்ச்சிக்கு செல்வோர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் திருமண பத்திரிகைகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்த பின்பு பல்வேறு அறிவுரைகள் வழங்கி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

முக்கிய பகுதிகளான பவானி - மேட்டூர் சாலை , பவானி-ஈரோடு சாலை , பவானி - சத்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 9 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்