/* */

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது‌

பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது‌
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆர்.என்.புதூர், காளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் தமிழரசு (21) என்பதும், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தமிழரசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 20 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது