பவானி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது‌

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட வடிவேல்

பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்

ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்து போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி