/* */

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட சிவக்குமார் , ராமசாமி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது செம்புளிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 72) என்பவர் 40 மதுபாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 48) என்பவர் 28 மதுபாட்டில்களும் பையில் போட்டு வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 68 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?