ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 4 வாலிபர்கள் கைது!

ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 4 வாலிபர்கள் கைது!
X
ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பாலத்காரம் செய்து அடித்து துன்புறுத்தினர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (வயது 21), சென்னிமலை சாலை மணல்மேட்டை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (வயது 25), ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (வயது 25), மரப்பாலத்தை சேர்ந்த ரவி மகன் குகன் (வயது 23) என நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Next Story