ஈரோட்டில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது!

பைல் படம்.
ஈரோட்டில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் மினிராஜ். இவருடைய மனைவி ரதிகலா (வயது 46). இவர் கடந்த 9ம் தேதி ஈரோடு சூளை சி.கே.நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அவருக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசினார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் ரதிகலாவின் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து, ரதிகலா கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போனை பறித்தவர்கள், ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu