மொடக்குறிச்சி அருகே முகவரி கேட்பது போல் நடித்து ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் அரை பவுன் நகை பறிப்பு!

மொடக்குறிச்சி அருகே முகவரி கேட்பது போல் நடித்து ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் அரை பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் நகராட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி இசக்கியம்மாள் (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த 2 பேரில் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால், சுதாரித்துக்கொண்ட இசக்கியம்மாள் தாலிச்சங்கிலியை இறுக்கிப்பிடித்து கொண்டு அலறினார்.
இதில், சிக்கிய அரை பவுன் மாங்கல்யத்துடன் 2 மர்மநபர்களும் அங்கிருந்து தப்பித்து விட்டனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் இசக்கியம்மாள் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu