அந்தியூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

அந்தியூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

அந்தியூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது 29). தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவருக்கு மகாராணி என்ற மனைவியும், மிதுலேஷ் என்ற மகனும் உள்ளனர். பாலசுப்ரமணியத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி தகராறு ஏற்படவே, பாலசுப்பிரமணியத்தின் மனைவி மகாராணி கோபித்துக் கொண்டு அவரது தந்தை வீட்டிற்குச் சென்றார்.இதனால் மனமுடைந்து நிலையில் காணப்பட்ட பாலசுப்ரமணியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் பாலசுப்ரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story