/* */

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு

சிபிஐ கட்சியின் சார்பில், ஒரிச்சேரிப்புதூரில் 22 வருடங்களாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு
X

பவானி வட்டாட்சியரிடம் சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஒரிச்சேரிபுதூரில் 16-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 22 வருடங்களாக அரசு நிலத்தில் வசித்து வருகின்றனர். இதையடுத்து முறையாக வீட்டு ரசீது,மின் ரசீது இருந்தும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்டம் நிர்வாகத்திடம் மனு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் சென்று பவானி வட்டாச்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு வழங்கினர். தொடர்ந்து பட்டா இல்லாததால் குடும்பத்தினர் தொகுப்பு வீடு வங்கியில் கடன் வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்பதால் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மனுவை பெற்று கொண்ட வட்டாச்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Updated On: 7 Jun 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை