Begin typing your search above and press return to search.
சென்னிமலை அருகே கீழே மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சென்னிமலை அருகே கீழே மயங்கி விழந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
சென்னிமலை அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (52). இவர் ஈரோடு மாநகர மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்கத்தில் சுமை தூக்குவோர் பிரிவில் உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் திருமூர்த்தி சேரில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீரென அவர் கீழே மயங்கி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.