மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: அக்காள் - தங்கை பலியான சோகம்

விபத்தில் பலியான சகோதரிகள்.
பவானியை அடுத்த எலவமலை அருகே உள்ள விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜ். பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள்கள் ஷாலினி (வயது 18), நிஷா ( வயது 17). இதில் ஷாலினி, ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தங்கை நிஷா, கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.நேற்று நிஷாவுக்கு பிறந்த நாள். இதனால் தன்னுடைய சித்தப்பா மகன் சுபாஷ் என்பவருடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து 3 பேரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள திருப்பத்தில் திரும்பியபோது, மோட்டார்சைக்கிளின் பின்புறம் கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஷாலினி, நிஷா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லேசான காயத்துடன் சுபாஷ் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷாலினி, நிஷா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu