/* */

பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீரை திமுகவினர் வழங்கல்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது...

HIGHLIGHTS

பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீரை திமுகவினர் வழங்கல்
X

கொரானா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளோடு, கருக்கங்காட்டு வலசு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளரும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான சு .முத்துச்சாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய துனைசெயலாளர் முருகேசன், சென்னிமலை உராட்சி மன்ற தலைவர் காயத்திரி இளங்கோவன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 April 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...