Begin typing your search above and press return to search.
பெருந்துறை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) மின்நிறுத்தம்
HIGHLIGHTS
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், பெருந்துறை ஆர்.எஸ்., 1010 நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.