/* */

அந்தியூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 வடமாநில இளைஞர்களுக்கு அபராதம்

அந்தியூர் அருகே வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சுற்றித்திரிந்த மூன்று வட மாநில இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 வடமாநில இளைஞர்களுக்கு அபராதம்
X

வனப்பகுதியில் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்கள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,சட்டவிரோதமாக 3 இளைஞர்கள் சுற்றித் திறிந்தது தெரியவந்தது. தொடர்ந்து மூன்று இளைஞர்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த ஜஹாங்கீர் (22), சலாம் ஹாசி(19), அபுல்வராசைன் மொண் (27) என தெரியவந்தது.

மேலும் இவர்கள் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் செங்கல் சூலையில் பணிபுரிந்து வருபவர்கள் என்றும் இன்று பக்ரீத் விடுமுறை தினத்தை ஒட்டி மூன்று பேரும் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மூவருக்கும் தலா ரூபாய் 2000 வீதம் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Updated On: 10 July 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு