/* */

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு
X

பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோரை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகர அதிமுக சார்பில், ஆண்டுதோறும் கோடை காலங்களில் இலவசமாக நீர்மோர் பந்தல் அமைத்து, பொதுமக்கள் காலை முதல் மாலை வரை நீர்மோர் வழங்கப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டும் கோபி நகர அதிமுக சார்பில், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு, நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களுக்கு இலவசமாக இளநீர் மற்றும் நீர்மோர் போன்றவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி சத்தியபாமா, நகர செயலாளர் பிரினியோ கணேஷ் , மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...