பவானியில் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

பவானியில் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

பவானி பூக்கடை பிரிவு அருகே நகர திமுக சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி பூக்கடை பிரிவு அருகே நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்க வேண்டி பவானி நகர திமுக சார்பில் பூக்கடை பிரிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பவானி நகர கழக செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் இந்தர்ஜி, நகர அவை தலைவர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி கலந்து கொண்டு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இதில் நகர கழக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, மாணவரணி அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி