Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் விசைத்தறிக் கூடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்
HIGHLIGHTS
ஈரோடு சம்பத்நகர் பகுதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தில், இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் கசிவு ஏற்பட்ட காரணத்தால், விசைத்தறி கூடம் முழுவதும் தீ பரவியது.இதில், மாற்றுத்திறனாளி விஜி என்பவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.