ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ்.என்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதல் நாளில் 3 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முதல் நாளில், 3 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் இன்று (ஜன.10) மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி இன்று (ஜன.10) காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வருகிற 17ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். தேர்தல் தொடர்பான புகார்கள் இதுவரை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் படை குழுவினர் மூலம் தற்போது வரை ரூ.2.80 லட்சம் மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பேட்டியின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், மாநகர் நல மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture