/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் வேட்டுவன்புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மினியப்பன். இவரது அத்தை ராமாயாளுக்கு (வயது 85) திருமணமாகி குழந்தை இல்லை. கணவரும் இறந்து விட்டதால் தனது அக்கா பராமரிப்பில் வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளனர். ராமாயாளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டி ராமாயாள் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றிக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு மினியப்பனின் மனைவி, மினியப்பன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து விட்டு தீக்காயங்களுடன் இருந்த ராமாயாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமாயாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்