/* */

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்
X

அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரி அருகே நீர் வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 14 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 3 மாதத்திற்கும் முன்னதாக, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த 14 பேரும் மாற்று இடம் வழங்க வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு விண்ணப்பம் கொடுத்தனர். பரிசீலனை செய்த வருவாய்த்துறை 14 பேருக்கும் கடந்த மாதம் மாற்று இடம் வழங்கியது.

இந்நிலையில், நேற்று காலை நீர் வழிப்பாதையில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், வீடுகள் , பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. முன்னதாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன் பிறகு வீடுகளை இடிக்கப்பட்டன. அப்போது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 21 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...