/* */

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும்.

HIGHLIGHTS

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட   ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
X

பவானி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்த சங்க நிர்வாகிகள்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இ.கம்யூ. கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், சங்கத் தலைவர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் கோபால், மாவட்ட சுமைப்பணி தொழில்சங்க ஒருங்கிணைப்பார் சந்திரசேகர், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பவானி நகராட்சி ஆணையாளர் தாமரையிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் : தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலியை ரூ.578-ஆக உயர்த்திட வேண்டும். 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பவானி நகராட்சி கிளையின் துணைத் தலைவர் செல்லப்பன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகக் குழு உறுப்பினர் குப்புராஜ், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

Updated On: 6 Jan 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...